திருப்பதி: ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பகுதியில் தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து நகைகளை திருடும் சைகோ கொலைகாரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி பகுதியில் கடந்த ஜூலை மாதம் சரோஜா என்ற பெண்ணை மர்மக்கும்பல் கொலை செய்து நகையை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்த் என்பவனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து விசாரணையில் சரோஜாவின் முன்னாள் கணவர் கோபால் ரெட்டி மற்றும் அவரது மகன் நரசிம்மன் ஆகியோரிடம் இணைந்து சரோஜாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.