பெரம்பலூர்: திருச்சி அருகே ஏ.டி.எம் மையத்தில் பணம் கொள்ளையடித்த நபரை ஆட்டோ ஓட்டுநர் மூலம் காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி தெப்பக்குளம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கே சில நாட்களுக்கு முன்பு ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வங்கியில் செக் கொடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் பெற்றனர். அப்போது அவர்கள் கவனத்தை திசை திருப்பிய நபர் ஒருவர் 16 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார். இதையடுத்து அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் பாலக்கரையில் நின்றுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் முருகையா என்பவரை மதுபோதையில் ஒருவர் சவாரிக்கு தமக்கு லாட்ஜில் அரை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து அவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதிக்கு சென்ற ஓட்டுநர் அங்கே வாடகைக்கு அனுகியுள்ளார். அச்சமயம் லாட்ஜில் உள்ளவர்கள் அடையாள அட்டை கேட்டுள்ளனர்.