மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பனி நியமன முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் நடத்தி வந்த விசாரணை முடிவடைந்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.பி செல்லத்துரை துணைவேந்தராக பதவி வகித்தபோது 69 பேராசிரியர்களை பனி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தணிக்கையாளர் வீரபாண்டியன், வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராமசாமி ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.