கோவை: இஸ்ரோ உதவியால் மணல் கொள்ளையை தடுக்க மத்திய அரசால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இஸ்ரோவின் வரைபடம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமுள்ளதாகவும், இதன்மூலம் மாபியா கொள்ளை தடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.