திமுக நடத்தும் முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது த.வேணுகோபாலுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு

சென்னை: திமுக நடத்தும் முப்பெரும் விழாவை ஒட்டி பெரியார் விருது த.வேணுகோபாலுக்கு வழங்கப்படுகிறது. அண்ணா விருது சி.நந்தகோபாலுக்கும், கலைஞர் விருது ஏ.கே.ஜெகதீசனுக்கும் வழங்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. பாவேந்தர் விருது திருமதி சித்ரமுகி சத்தியவாணி முத்துவுக்கும், பேராசிரியர் விருது தஞ்சை இறைவனுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: