விஷயங்கள் சாதாரணமாக இருந்தால், அரசியல் தலைவர்கள் ஏன் வீட்டுக் காவலில் உள்ளனர்? காஷ்மீர் குறித்து குலாம்நபி ஆசாத் கேள்வி

புதுடெல்லி: ஒருபுறம் நிலைமை சாதாரணமானது என்று அரசாங்கம் கூறுகிறது, மறுபுறம் அவர்கள் யாரையும் செல்ல அனுமதிக்கவில்லை என்று காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுபோன்ற முரண்பாடுகளைப் பார்த்ததில்லை. விஷயங்கள் சாதாரணமாக இருந்தால், அரசியல் தலைவர்கள் ஏன் வீட்டுக் காவலில் உள்ளனர்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இன்று ஸ்ரீநகர் செல்லவுள்ள எதிர்க்கட்சி தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: