மதுரை காமராஜர் பல்கலையில் 69 பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பான விசாரணை நிறைவு

மதுரை: மதுரை காமராஜர் பல்கலையில் 69 பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையிலான குழு தனது இறுதிகட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. விசாரணை அறிக்கையை குழு அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணைவேந்தராக செல்லதுரை இருந்தபோது பல்கலையில் 69 பேரை நியமித்ததில் முறைகேடு என புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: