ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன் ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக் கோரி மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை சிறைபிடித்த படகுகளை அரசுடமையாக்குவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இலங்கை வசமுள்ள படகுகள், அரசுடமையாக்கிய படகிற்கு நிவாரணம் வழங்கி, சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: