சென்னை: மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கொண்டு வரப்படும் ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டத்தை சட்டவிரோதமானது என கூற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடைவிதிக்கக்கோரி அப்பகுதியினர் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தனர். மாடம்பாக்கம், சிட்லம்பாக்கம் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு வசதியாக ரூபாய் 2 கொடியே 70 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த மாடம்பாக்கம் ஏரியில் 5 கிணறுகள் தோண்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை தொடர்ந்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கிணறுகள் தோண்ட தமிழக அரசுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.