ஆற்காடு: வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். அவரது அறிவிப்பால் பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பும், அதிருப்தி குரல்களும் எழுந்துள்ளன. இதில் வரலாற்று சிறப்புமிக்க ஆற்காடு நகரின் பெயரில் மாவட்டம் அறிவிக்காததால் ஆற்காடு தாலுகா மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற நகரின் முக்கிய பிரமுகர்கள் புதிய மாவட்டத்திற்கு ஆற்காடு பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.