நீட் ரத்து கோரி போராட்டம்: மதிமுக மாணவர் அணி தீர்மானம்

சென்னை: மதிமுக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட வைகோவுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. 2020ம் ஆண்டில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ‘மறுமலர்ச்சி மாணவர் மாநாட்டை’ சிறப்பாக நடத்த வேண்டும், செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த தின மாநாட்டில் மதிமுக மாணவர் அணியினர் ஐந்தாயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும், நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், அதற்கெதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.

Related Stories: