திருமலை : நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவியை மிரட்டி தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குரபலகொட்டாவை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் மதனபல்லி அருகே உள்ள அந்திரிநீவா கால்வாய் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள் மாணவியையும், அவரது நண்பரையும் ‘நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?’ எனக் கேட்டு தகராறு செய்தனர். அவர்கள் மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கி விரட்டி அடித்தனர். பின்னர், மாணவியை 3 பேரும் சேர்ந்து அந்திரிநீவா கால்வாய்க்கு தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.