சென்னை: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த விங்கிபாரிக் (30), திருப்பூரில் தங்கி, அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு உடல் நிலை மிகவும் மோசமானதால் நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து ஆலப்புழா எக்ஸ்பிரசில் சொந்த ஊர் புறப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபோது, விங்கிபாரிக், இருக்கையிலேயே இறந்தது தெரிந்தது. இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.