இளையான்குடி: இளையான்குடியில் பயிர் காப்பீடு முறைகேடு குறித்து புகார் செய்த மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, கொடிமங்கலத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(62). மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர். நேற்று முன்தினம் அழகர்சாமியின் வீட்டிற்கு நாகமுகுந்தன்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், மனைவி தமிழ்ச்செல்வி வந்தனர். அப்போது அழகர்சாமி வீட்டில் இல்லை. எனவே அவரது மனைவி ராஜேஸ்வரியிடம், அழகர்சாமியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜேஸ்வரி புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.