திருவாரூர் : தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேர் கைதாகி உள்ளனர். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேரை திருவாரூர் காவல்துறை கைது செய்தது.