தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : நாகையில் ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

நாகை : தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நாகையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாகூரில் மாமனார் வீட்டில் தங்கியிருந்த சையது அபுதாகீர் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நாகை காவல் நிலையத்தில் 2 மணி நேரமாக விசாரணை நீடிக்கிறது .ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மணல்வாடி பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: