நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை : பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும்

என்று காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 மானியம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 5 லட்சம் ஏக்கர் பரப்பு விவசாயத்திற்கு உழவு மானியம் வழங்க ரூ.30. கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: