பாரீஸ் : உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என்று பிரான்சில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் யுனெஸ்கோ நிறுவன தலைமையகத்தில் பிரதமர் மோடி இந்தியர்களிடையே பேசி வருகிறார். அப்போது அவர் பேசியது குறிப்புகளாக பின்வருமாறு :
*இந்தியாவும் பிரான்சும் எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் இணைந்தும் செயல்பட்டு வருகின்றன.
* இந்தியாவில் வறுமையால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
*இந்தியாவில் புதியதாக தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
*தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
*உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
* 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும்.
*தீவிரவாதத்தை இந்தியா இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
*பாரீஸ் பிரகடன இலக்கை அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தியா எட்டும்.
* 2025-ம் ஆண்டில் காசநோய் இல்லா இந்தியா உருவாக்கப்படும்.