டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனுவில் செப்டம்பர் 3ல் ஆணை பிறப்பிக்கப்பட உள்ளது. இருவரின் முன் ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனு மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட உள்ளது. இருவரையும் கைது செய்வதற்கான இடைக்காலத் தடை இன்றுடன் முடிந்த நிலையில் செப்டம்பர் 3ல் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் தந்ததில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டது.