தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATF அமைப்பு

பாரிஸ்: தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதியை தடுத்து நிறுத்தாததால் சர்வதேச சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அமைப்பு (FATF) பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) அமைப்பின் ஆசியா-பசிபிக் (APG) பிரிவு நிதி மோசடி, பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி போன்றவற்றை கண்காணித்து வருகிறது. அதன்படி, பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது மற்றும் சட்ட விரோத பணபரிவர்த்தனை ஆகியவற்றை தடுப்பதற்காக ஆசிய - பசிபிக் குழுமம் (APG) நிர்ணயித்துள்ள 40 விதிகளில் 32 விதிகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை கட்டுபடுத்தவதும் பாகிஸ்தான் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் FATF மற்றும் APG ஆகியவற்றின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) பாகிஸ்தான் கிரே பட்டியலில் வைத்திருந்தது. கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத செயல்களுக்கு செல்லும் நிதியை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே வரும் அக்டோபர் மாதம் வரை இந்த நடவடிக்கை எடுக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் அக்டோபர் மாதம் வரை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த APG அமைப்பின் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கடந்த 2 நாட்களாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்கலாமா என்பது குறித்து 7 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று பாகிஸ்தான் ஆசியா-பசிபிக் குழுவின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நிதி அமைப்பான FATF அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கறுப்பு பட்டியலில் இருப்பதை தடுக்க 2019 அக்டோபர் மாதத்திற்குள் பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்று தான் சொல்ல முடியும். அப்படி தவறும் பட்சத்தில் சர்வதேச அமைப்புக்களிடம் இருந்து பாக்கிஸ்தான் நிதி பெற முடியாத நிலை ஏற்படும்.

Related Stories: