மன்னார்குடி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து 2 பள்ளி மாணவர்கள் காயம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து 2 பள்ளி மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். தென்கரை வாசலில் இருசக்கர வாகனத்தில் சுந்தரம்(40) என்பவர் செல்லும் போது கீழே விழுந்த நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சிறுவர்கள் காயம் அடைத்துள்ளனர். காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் பாலமுரளி, செல்வபாலாஜி ஆகிய இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: