×

2021-மார்ச் மாதத்திற்குள் புதிய கொள்ளிடம் பாலம் கட்டி முடிக்க திட்டம்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பில் உள்ள காவிரி மேலணையை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் ஆய்வு செய்தனர். முக்கொம்பு  மேலணையின் முடிவுற்ற பணிகளையும், அதேபோல புதிய அணைகளின் திட்டங்கள் குறித்தும், நீர்வரத்து குறித்தும் ஆய்வு நடத்தினர். கடந்த ஆண்டு இதே மாதம் 22ம் தேதி, அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து தமிழக அரசு சார்பில் சுமார் 38 கொடியே 85 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக பால பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை காரணமாக, கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், 90% பணிகள் நிறைவுபெற்ற மேலணை, தற்போது 100% பணிகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த வருவாய் நிர்வாக ஆணையர் மேலணையின் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். அதேபோல, மேலணைக்கு சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் புதிய பால பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் வெள்ளபெருகின் காரணமாக தடைபடுமா? அல்லது தொடர்ந்து நடைபெறுமா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.

வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்:

ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வரும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முக்கொம்பு தற்காலிக தடுப்பணை, 2 லட்சம் கன அடி நீர் வந்தாலும் தாங்கும் அளவிற்கு வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், அம்சமாக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாகவே, ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று குடிமராமத்து பணிகள் தொடர்பாக மக்களின் தேவைகளை அறிந்து வருவதாக தெரிவித்தார்.

Tags : Loot Bridge, Revenue Administration Commissioner, Satyagopal
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...