சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் என எந்த புகைப்படமும் வெளியிடவில்லை : கோவை ஆணையர்

கோவை : சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் என எந்த புகைப்படமும் வெளியிடவில்லை என்று கோவை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் கோவை ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு :

*6 பயங்கரவாதிகள் கோவை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது; நகரின் முக்கிய இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்

*கோவையில் வணிக வளாகங்கள், கோவில்களில் பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.

*கோவை முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

*கோவையில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.

*சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: