கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை : டிஜிபி திரிபாதி

கோவை : கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார். கோவையில் ஊடுருவிய 2 தீவிரவாதிகளின் 2 படங்கள் வெளியானதாக வந்த தகவலுக்கு டிஜிபி மறுப்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் என வெளியான 2 புகைப்படங்களும் தவறானது எனத் தெரிவித்த நிலையில்,. மத்திய உள்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு அலர்ட் கொடுத்தது. உளவுத்துறை எச்சரித்த நிலையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். புகைப்படத்தில் உள்ள நபர்கள் குறித்த தகவல் தெரிந்தால் போலீசாரை பொது மக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: