பவானிசாகர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மான் மீட்பு

சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்த புள்ளிமானை விவசாயிகள் பத்திரமாக மீட்டனர்.  பவானிசாகர் அருகே உள்ள நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (53). இவரது தோட்டத்தில் 20 அடி அளவில் தண்ணீர் தொட்டி உள்ளது. இவர், நேற்று காலை தனது விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்றபோது தொட்டிக்குள் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்தது.

இதைப்பார்த்த பழனிச்சாமி, உடனடியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள் தண்ணீர் தொட்டியில் இறங்கி தத்தளித்த புள்ளிமானை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் அமுல்ராஜ் சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்களை அனுப்பி வைத்தார்.  வனத்துறையினர் அந்த புள்ளிமானை பத்திரமாக மீட்டு அருகே உள்ள சீரங்கராயன் கரடு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். வனப்பகுதியில் மான் அவிழ்த்து விட்டதும் துள்ளி குதித்து ஓடி மறைந்தது.

Related Stories: