×

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை

சென்னை : தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறையின் தகவலையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் அருகே தமிழகம் - கர்நாடகம் இருமாநில எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாக தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இலங்கை வழியாக தமிழகத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தது. 6 பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் 5 பயங்கரவாதிகள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


Tags : Terrorists, intelligence, Sri Lanka, vehicle censorship
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...