மதுரை: திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேதசங்கரநாராயணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மண்டலங்களில் நெல், அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை 1.9.2019 முதல் 31.8.2021 வரை, வாகனங்களில் கொண்டு செல்வதற்கான டெண்டர் அறிவிப்பு நிர்வாக இயக்குநரால் கடந்த ஜூலை 19ல் வெளியிடப்பட்டது. இதில் பங்ேகற்க விரும்பும் தகுதியுள்ள ஒப்பந்தாரர் ஆக.7 முதல் ஆக.13வரைக்குள் விண்ணப்பிக்க கூறப்பட்டிருந்தது. டெண்டர் விதிப்படி அறிவிக்கப்பட்டது முதல் விண்ணப்பிப்பது வரை 30 நாள் கால அவகாசம் வேண்டுமென்பது விதி.