நார்த் சவுண்ட்: முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சாம்யின் ஷிப் போட்டியில் மேற்கிந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டன் கோஹ்லி உள்பட 3 பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் ரன் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது. கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்தியா-மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நார்த் சவுண்ட் பகுதியில் துவங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல். மயாங் அகர்வால் இறங்கினர். ஆனால் ரோச் பந்து வீச்சை சமாளிக் முடியாமல் அகல்வால் 5 ரன்னிலும் புஜாரா 2 ரன்னிலும் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்கள்.