×

ஜோலார்பேட்டை சோளிங்கரில் தற்காலிகமாக நின்று செல்லும் ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எக்ஸ்பிரஸ் ரயில்கள் சில ரயில் நிலையங்களில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பதி - கோவை இடையே இயக்கப்படும் திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22615, 22616), மறு அறிவிப்பு வரும் வரை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலும், சென்ட்ரல் - விஜயவாடா சென்ட்ரல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் (12077, 12078), நாயுடுபேட்டை ரயில் நிலையத்திலும், சென்ட்ரல்- மங்களூர் இடையே இயக்கப்படும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12685, 12686) ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலும், சென்ட்ரல்- கேஎஸ்ஆர் பெங்களூர் இடையே இயக்கப்படும் சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (12639, 12640), சோளிங்கர் ரயில் நிலையங்களில் நின்று புறப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



Tags : Jolarpettai, Sholingar, Trains, Southern Railway
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...