முன்ஜாமீன் மனு இன்று விசாரணை

புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, கடந்த 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் அவர் சிபிஐ.யால் கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரத்தின் மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் போபண்ணா ஆகியோர் அம ர்வு இதை விசாரிக்க உள்ளது.

Related Stories: