×

கல்லூரியில் செல்போன் பறித்ததால் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

நாமக்கல்: நாமக்கல்லில், தண்டவாளத்தில் தலை வைத்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே, மோகனூர் ரயில்வே பாதையில் நேற்று காலை சுமார் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் தலை துண்டான நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள், இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் நாமக்கல் அருகே பழையபாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் தீபக் (19) என்பது தெரியவந்தது. இவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார்.

அந்த கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் செல்போன் உபயோகிப்பதற்கு தடை விதித்துள்ளது. ஆனால், மாணவர் தீபக், கல்லூரி நிர்வாகத்தின் விதியை மீறி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த கல்லூரி நிர்வாகத்தினர், செல்போனை பறித்து கொண்டு, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், மனமுடைந்த தீபக், நாமக்கல் -மோகனூர் செல்லும் ரயில் பாதையில் தலை வைத்து, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


Tags : Engineering student ,commits suicide
× RELATED நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த...