சென்னை: திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது 5 வயது மகள் 1ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5.12.2016 அன்று காயத்ரி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது, சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். இந்நிலையில், வேலைக்கு சென்ற காயத்ரி வீட்டுக்கு திரும்பி வந்தபோது, சிறுமி அழுதுகொண்டே பதற்றத்துடன் இருந்தாள். காயத்ரி இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தார். அப்போது வீட்டிற்கு எதிரே எலக்ட்ரிக் கடை வைத்துள்ள நரேந்திரா (24) என்ற வாலிபர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அழுதுள்ளாள்.