விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து, பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் துவங்கி 45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 40 முதல் 50 சதவீத பணிகள் முடிந்திருக்க வேண்டிய நிலையில், 10 சதவீத பணிகள் மட்டும் நடந்திருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சில கண்மாய்களில் பணி துவங்கவே இல்லை. மழை வருவதற்கு முன்பாக மராமத்து பணிகளை முடிக்க வேண்டும். விவசாயிகள் பங்களிப்புடன் முடிக்க வேண்டும். பணிகள் துவங்கி 2 மாதங்களில் 10 சதவீதம் என்றால் 5 மாதம் ஆனாலும் வேலை நடக்காது. வேலையை எடுத்து செய்யும் நபர்கள் சரியில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். வரும் 5 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். ரோலர் இல்லை.