விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு திண்டுக்கலில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கலில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திண்டுக்கலில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சிற்பக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே உள்ள நொச்சி ஓடைப்பட்டியில் ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை உருவாக்கப்படும் சிலைகள், திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அதிக அளவில் அனுப்பப்படுகிறன. இந்த ஆண்டு புதுவரவாக பாலகணபதி, அரங்கநாதர், அத்திவரதர், கற்பகவிநாயகர், சிம்ம மற்றும் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. செயற்கை முத்து மற்றும் ரத்தினக் கல் பதிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கும் பொதுமக்களை அதிகளவில் கவர்ந்துள்ளன.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண், காகிதக் கூழ், கிழங்கு மாவில் இவை செய்யப்படுகின்றன. மேலும் செயற்கை வண்ணத்திற்கு பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வாட்டர் பெயிண்ட் பயன்படுத்தப்படுகிறது. 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை இவற்றின் விலைகள் உள்ளன. விநாயகர் சதூர்த்திக்கு சில நாட்களே உள்ளதால் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: