ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மருத்துவரை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த நிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தனபால் தனது மனைவி காயத்ரியை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுகிழமை அனுமதித்துள்ளார். சிகிச்சையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இரு தினங்கள் ஆன நிலையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தையை குளிக்க வைப்பதற்காக செவிலியர் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.