டெல்லி: டெல்லி ஜந்தர்மந்தரில் திமுக உள்ளிட்ட 14 எதிர்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க, அரசியல் கட்சி தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.