காரைக்குடி: காரைக்குடியில் கழனிவாசல் சந்திப்பு சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காரைக்குடி நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணி நடந்து வருவதால், பெரும்பாலான சாலைகள் கடந்த 4 ஆண்டுகளக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக, கழனிவாசல் குடிநீர் தொட்டி சாலை சந்திப்பு குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக மதுரை, திருச்சி, சென்னை, பரமக்குடி, திண்டுக்கல் செல்லும் பஸ்களும் மற்ற ஊர்களில் இருந்து வரும் பஸ்களும் வந்து செல்கின்றன. மேலும், கழனிவாசல் சந்திப்பில், பள்ளிகள் உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கரவாகனங்கள், லாரிகள் வந்து செல்கின்றன. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது பாதாளச்சாக்கடை பணிகளை மேற்கோள் காட்டி, புதிதாக அமைக்கப்படவில்லை. எனவே, கழனிவாசல் சாலை சந்திப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.