புதுடெல்லி: டெல்லியில் உள்ள ரேஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுகிறார். 10 முதல் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாமீன் கோரி ப.சிதம்பரம் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் அதை எதிர்கொள்வது பற்றி சிபிஐ ஆலோசனை நடத்தியுள்ளது. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் உடனே அமலாக்கத்துறை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.