×

தேவகோட்டை அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சங்கரபதி நகர் பகுதியில், ஒரு வீட்டில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதாக சிவகங்கை மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நேற்று  நடத்திய சோதனையில், 2,544 குவார்ட்டர் மது பாட்டில்கள் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். மேலும் மதுபானம் தயாரிக்க தேவையான இயந்திரம், ரசாயன பவுடர், காலி பாட்டில்கள், லேபிள்கள் ஆகியவை இருந்தன. இவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், தேவகோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் போலி மதுபான தொழிற்சாலையை நடத்தியுள்ளார்.  இதற்கு முன்பு திருப்பூரில் போலி மதுபானம் தயாரித்து போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இதையடுத்து தலைமறைவான ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.

Tags : Fake Liquor Plant ,Devakottai
× RELATED பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில்...