ஏலகிரி மலையில் திடீர் மண்சரிவு

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை சுற்றுலா தலமாக உள்ளது.  சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாக மலைகளில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.  கடந்த 19ம் தேதி மலைப் பாதையின் 2வது வளைவில் ஒரு பெரிய பாறாங்கல் உருண்டு சாலையின் நடுவே விழுந்தது. இதேபோல் நேற்று முன்தினம் மலைப்பாதையில் 9 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தது. அப்போது, அவ்வழியாக பொதுமக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Related Stories: