எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

பெரம்பூர்: எஸ்டிபிஐ கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் முகமது ரஷீத் தலைமையில் நடந்தது. இதில் மாநில செயலாளர் அமீர் ஹம்சா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முன்மொழிந்தனர். பின்னர், கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வடசென்னையில் குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், புதிய சாலைகள் அமைக்க வேண்டும். எரியாத மின்விளக்குகளை மாற்ற வேண்டும். குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும். மேலும், சாலைகளில் கொட்டப்பட்ட  குப்பைகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: