பெரம்பூர்: எஸ்டிபிஐ கட்சியின் வடசென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் முகமது ரஷீத் தலைமையில் நடந்தது. இதில் மாநில செயலாளர் அமீர் ஹம்சா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்து அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் முன்மொழிந்தனர். பின்னர், கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.