பால்குட ஊர்வலம்

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் கலைஞர் நகர் 4வது தெருவில் உள்ள நவசக்தி  கௌரி ஞானாம்பிகை கோயிலில் 35ம் ஆண்டு திருவிழா  நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று 300 பெண்கள் சத்தியமூர்த்தி நகரில் இருந்து பால்குடம்  ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் கவுன்சிலர் மணிக்குமார் மற்றும் ஆலய விழா குழு நிர்வாகிகள்  வரதன், ஜான்சன் அனந்தகிருஷ்ணன், மூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: