புதுடெல்லி: ராணுவத்தில் நடக்கும் மனித உரிமை பிரச்னைகளுக்கு தீர்வு காண, முப்படை அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்தல் உள்ளிட்ட ராணுவ தலைமையக அதிரடி மாற்றங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாதுகாப்புத் துறையில் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள கடந்தாண்டு 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. இவை கடந்த அக்டோபரில் தனித்தனியாக அறிக்கைகளை சமர்பித்தன. அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய கடற்படை, விமானப்படை, ராணுவம் ஆகிய மூன்று பிரிவுகளின், 3 கலோனல் ரேங்க் அதிகாரிகள் தலைமையில், கண்காணிப்பு குழு அமைக்கும் சீரமைப்பு மாற்றத்துக்கு ராஜ்நாத் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார்.