×

தமிழக-கர்நாடக எல்லையில் காரில் கடத்திய 1.5 கோடி பறிமுதல்

சத்தியமங்கலம்: தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆசனூர் சோதனைசாவடியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஆசனூர் மதுவிலக்கு சோதனைசாவடியில் போலீசார் நேற்று  அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார், ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து காரில் வந்த 2 பேரை பணத்துடன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பைஜு (40), ரோகன்குமார் (39) என்பதும், புனேவில் இருந்து கேரள மாநிலம் கொச்சி செல்ல காரில் வந்ததாகவும், நிலம் வாங்க பணத்தை எடுத்துச்செல்வதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu, Karnataka border, extortion of money
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்