ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போலீசார் நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதி ஊடுருவி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, தீவிரவாதிக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இவன், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன். இந்த சண்டையில் போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும், ஒருவர் காயமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதி பாரமுல்லா பகுதியை சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவன், லஷ்கர் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததோடு, பல்வேறு தீவிரவாத குற்ற செயல்களில் ஈடுபட்டவன். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.