புதுடெல்லி: ம.பி. முன்னாள் முதல்வர் பாபுலால் கவுரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளர். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் பாபுலால் (86). பாஜ தலைவர்களில் ஒருவர். நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர், 2004ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தவர். பாபுலால் கவுர் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் பிரதமர் பாபுலால் கவுர் இறந்த செய்தி வேதனை அளிக்கிறது. ஜனசங்க நாட்களில் இருந்து கட்சியை வலுப்படுத்துவதற்காக அவர் பணியாற்றி உள்ளார். அமைச்சராகவும், முதல்வராகவும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். பல ஆண்டுகளாக மக்களுக்காக சேவையாற்றியவர்,’ என்று பதிவிட்டுள்ளார்.