கேரள கடலில் மாயமான தமிழக மீனவரை மீட்கக்கோரி வழக்கு அரசுக்கு நோட்டீஸ்

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் அந்தோணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மாதம் 18ம் தேதி நீரோடி துறைமுக பகுதியில் இருந்து ஸ்டாலின் என்பவரது படகில் 5 பேர், கேரள ஆழ்கடல் பகுதிக்கு  மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது.  இருவர் மீட்கப்பட்டனர். மேலும் 2 பேர் உடல்கள் கேரள கடல் பகுதியில் மீட்கப்பட்டன. மீனவர் ஜான்பாஸ்கோ (44) மட்டும் இதுவரை மீட்கப்படவில்லை. அவரை மீட்கவும், கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், குமரி கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: