×

திருவண்ணாமலை அருகே தொடர் மழையால் வேடந்தவாடி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கு தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரும்பாலான குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. அதன்படி, துரிஞ்சாபுரம் ஒன்றியம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள ஏரிக்கும் தண்ணீர் வந்துள்ளது. ஏரி முழுமையாக நிரம்பாவிட்டாலும் பாதியளவு தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேடந்தவாடி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் பிரச்னை நிலவி வந்தது. குடிநீருக்காக கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.  இந்நிலையில், தற்போது பெய்துள்ள கன மழையினால் கிராமத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது.
ஏரி பகுதிக்கு தண்ணீர் வந்துள்ளதால், இப்பகுதியில் நிலவி வந்த தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது என கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai, continuous rainfall, Vedanthavadi lake
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...