×

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை: ப.சிதம்பரம் பேட்டி

டெல்லி:  ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.அவரது இல்லத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்நிலையில் சிதம்பரம் விவகாரம் குறித்தும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்தும் இன்று காங். மூத்த தலைவர்களான கபில்சிபல், அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித், உள்ளிட்டோருடன் ப.சிதம்பரமும் டெல்லியில் உள்ள காங். கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தனர்.

அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது; சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தலைவணங்கி ஏற்கிறேன்; பாரபட்சமாக விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினாலும் சட்டத்தை மதிக்கிறேன். சிபிஐ, அமலாக்கத்துறை சட்டத்தை மதிப்பது உண்மை எனில் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. சட்டத்தை மதிக்கும் என்ற முறையில் தலையை உயர்த்தி வெளியில் நடந்து செல்வேன் என கூறினார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. ‘ஜனநாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன்’.

7 மாதங்களுக்கு பின் எனது முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் என் பெயர் கூட இல்லை. சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம்; தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். ஐஎன்எக்ஸ் வழக்கில் என் மீதும், குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன. பொய்யர்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சிபிஐ போட்ட எஃப்ஐஆரிலும் என் பெயர் இல்லை. என்னுடைய வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.


Tags : Aieneks. , CBI, Enforcement Department, Criminal Investigation, P. Chidambaram
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...