டெல்லி: சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம் என ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக்கு ஆஜராக சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருகை தந்து பேட்டி அளித்துள்ளார். சட்டத்தை மதிக்கும் என்ற முறையில் தலையை உயர்த்தி வெளியில் நடந்து செல்வேன் என்றும் கூறியுள்ளார்.